Posts

Showing posts from December, 2018

ஒழுக்கம்

புத்தர்   ஒழுக்கத்திற்கு   மிகவும்   முக்கியத்துவம்   கொடுத்தார் .   அவர்   பாதையைச்   சுருக்கமாக சொல்வதென்றால்   அது :  ஒழுக்கம்  ( சீலம் ),  மன   ஒருமுகபடுத்துதல்  ( சமாதி ),  விவேகம்  ( பஞ்ஞா )  என்பதே .  ஒழுக்கம்   இல்லாமல்   பாதையில்   முன்னேறுவது    என்பது   இயலாத   காரியம் . இது   சம்பந்தமாகக்   கிருபானந்த   வாரியார் (1906-1993)  அவர்கள்   சொற்பொழிவு   ஒன்றில்    பல   நல்ல  அறிவுறைகளைத்தருகிறார் .  " சொல்லும்   செயலும்   ஒத்து   இருக்க   வேண்டும் ",   "பக்தியைக் காட்டிலும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இந்த நாட்டிலே",   " அறசியல்   தலைவர்  என்றால்   நேர்மை   இருக்க   வேண்டும் ."    அவர்   பேச்சில்   பெண்கள்   அடக்கமாக   இருக்கவேண்டும்  என்கிறார் .   ஆனால்   பௌத்த   நோக்கில்   ஆண்களும்   அடக்கமாக  (humility)  இருக்க   வேண்டும்   என்று  சொன்னால்   அது   பொருந்தும் .   அடக்கமாக   இருக்க   வேண்டுமென்றால்   அடிமையாக   (slavish)  இருக்க   வேண்டும்  என்பதில்லை .   மேலும்   மந்திரிக்கு   இருக்க   வேண்டிய   இலக்கணம்   பற்றி   கம்பரின்   அறிவுரைய

பௌத்தமும் தமிழும்! அறிமுகம்

பௌத்தமும் தமிழும் என்ற இந்த வலைப்பூ (blog) வின் பெயர் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி   (1900-1980) அவர்கள் எழுதிய பிரபலமான புத்தகத்தின் பெயரைக் கொண்டுள்ளது.  தினசரி வாழ்வில் அறத்தை/தம்மத்தைச் சந்திக்கும் போது தோன்றும் எண்ணங்களை அணுபவங்களை  அவ்வப்போது தமிழில் /ஆங்கிலத்தில் எழுதுவதே இந்த வலைப்பூவின்  நோக்கம். நன்றி!   மேலும் பௌத்தம் பற்றி அறிய: www.bautham.net = https://sites.google.com/site/budhhasangham/