Posts

Showing posts from 2021

அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

சமீபத்தில் ஒர் பௌத்த பெரியவர் தந்த அறிவுரை: 'புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டுமானால் மெய்ம்மையோடு (எதார்த்தத்தோடு) ஒத்து வாழ்' (Best way to honour the Buddha is to live in line with reality). புத்தர்  நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி கூறியது: 1. வயதாவது மனித இயல்பு. நான் வயதாவதைக் கடந்து போகவில்லை. I am of the nature to age, I have not gone beyond aging. இளமையின் மீதான மோகத்தை குறைக்க. (மோகத்தின் காரணமாக உடலாலும் பேச்சாலும் அறிவாலும் குற்றம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்) 2. நோய்வாய்ப்படுவது மனித இயல்பு. நான் நோய்வாய்ப்படுவதைக் கடந்து போகவில்லை. I am of the nature to sicken, I have not gone beyond sickness. உடல் ஆரோக்கியத்தின் மீதான மோகத்தை குறைக்க. 3. மரணமடைவது மனித இயல்பு. நான் மரணமடைவதைக் கடந்து போக வில்லை. வாழ்க்கையின் மீதான மோகத்தை குறைக்க. 4. எனக்குப் பிடித்த சுகம் தரும் பொருட்களும், அன்பும் பாசமும் கொண்ட உறவுகளும் ஒரு நாள் அப்படி அல்லாமல் மாறிப் போய்விடும். என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள். All that is mine, beloved and pleasing, will become otherwi

பிறப்பின் காரணமாக வருவது என்ன?

The following is often mentioned as the results of birth: jātipaccayā jarāmaraṇaṁ sokaparidevadukkhadomanassupāyāsā sambhavanti. (Pali ex SN 12.2) Rebirth is a condition for old age and death, sorrow, lamentation, pain, sadness(grief) and despair to come to be. ( Bhikkhu Sujato translation) தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு அவலம்  அரற்றுக்  கவலை  கையாறு  எனத் தவலில் துன்பம் தலைவரும் என்ப  (மணிமேகலை 30, 115-118) அவலம் -  சோகம் sorrow அரற்று - புலம்பல், lamentation கையாறு - இயலாமை despair/helplessness தவலில் துன்பம் – நீக்கமில்லாத் துன்பம் தவல் + இல் – நீக்கம் + இல்லாத  (முடிவிலா)

புத்தர்கற்பித்த முறைகள் மூன்று

 புத்தரின் பண்புகளில் ஒன்று: Anuttaro purisa-damma-sārathi (கற்பிக்கக்கூடியவருக்கான  தன்னிகரற்ற பயிற்சியாளர்) அவர் மூன்று வியக்கவைக்கும் வழிகளில் மக்களைச்சாந்தப்படுத்தினார்: 1. Iddhipāṭihāriyaṁ   Iddhi - superhuman power, Pāṭihāriya - marvel, wonder இத்தி சக்திகளைக்கொண்டு.  உ-ம்: அங்குலிமாலனை சாந்தப்படுத்தியது 2. ādesanāpāṭihāriyaṁ   ādesanā - mind reading மற்றவரின் மனத்தை அறிந்தவராய் உ-ம்: மகனை இழந்த கிசாகோதமியை சாந்தப்படுத்தியது 3. anusāsanīpāṭihāriyaṁ    anusāsanī - giving instruction தம்மத்தை போதித்து - நான்கு உண்மைகள் போன்ற போதனைகள் பெரும்பாலும் இந்தவழியையே பயன்படுத்தினார். ஆதாரம்:  அங்குத்தர  நிகாயம் AN3.60 AN 3.60: Saṅgāravasutta—Bhikkhu Sujato (suttacentral.net)