Posts

Showing posts from April, 2023

கோட்டை உவமானம்

  கோட்டை உவமானம் Nagaropamasutta நகரோபமசுத்தம் The Simile of the Citadel Aṅguttara Nikāya 7.67 (சுருக்கம்) எல்லைப் புறத்தில் உள்ள ஒரு கோட்டை எப்போது வேண்டுமானாலும் எதிரிகளால் தாக்கப்படலாம். எனவே, தயார் நிலையில் இருப்பது நல்லது. அதன்படி கோட்டையின் பாதுகாப்பு அமைந்திருக்க வேண்டும். அதேபோல நாமும் காமம், வெகுளி, அறியாமை என்ற விஷங்களால், விழித்திருக்கும் எந்நேரமும் தாக்கப்படுகிறோம். எனவே, நாமும் தயார் நிலையில் இருப்பது நல்லது. கோட்டையின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை உவமானங்களாகக் கொண்டு, புத்தர் மனதின் பாதுகாப்புக்கான ஏழு அத்தியாவசியங்களையும், நான்கு ஆகாரங்களையும் பட்டியலிட்டு தருகிறார்.  சூல புண்ணமா சுத்தத்தில் (சிறிய பௌர்ணமி தின போதனை MN110) வரும் நல்லோரின் ஏழு பண்புகளும், இந்த சுத்தத்தில் குறிப்பிடப்படும் ஏழு அத்தியாவசியமானவையும் ஒன்று.   அவை: 1. நம்பிக்கை saddhā 2. வெட்கம் (தவறு செய்வதற்கு) hirī  3. அச்சம் (தவறின் விளைவுகளுக்கு) ottāppa 4. போதனைகளை அறிந்திருப்பது bahussutā  5. சுறுசுறுப்புடன் செயல்படுவது vīriyā 6. கடைப்பிடி (கூர்மையான கவனம்) sati 7. விவேகம் pañña  ஃஃஃ நகரோபம

சிறிய பௌர்ணமி தின போதனை

 சிறிய பௌர்ணமி தின போதனை Cūḷapuṇṇama sutta    cūḷa சிறிய puṇṇama பௌர்ணமி மஜ்ஜிம நிகாயம் MN110 ஃஃஃ இவ்வாறு நான் கேள்வியுற்றேன். பகவர் ஒருமுறை சாவத்திக்கருகில், கிழக்கு விகாரையில், மிகாரரின் தாயின் அரண்மையில் எழுந்தருளியிருந்தார்.  அன்று பௌர்ணமி உபோசத தினம். சங்கத் துறவிகள் அவரை சூழ்ந்து இருக்க, புத்தர் ஒரு திறந்தவெளியில அமர்ந்திருந்தார். மிகவும் அமைதியாக இருந்த துறவிகளை புத்தர் கண்ணோட்டமிட்டார். அவர்களிடம், 'துறவிகளே, ஒரு நேர்மை இல்லாத மனிதர் மற்றொரு நேர்மை இல்லாத மனிதரை கண்டு, 'அவர் ஒரு நேர்மை இல்லாதவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா? "முடியாது, ஐயா." "நல்லது, துறவிகளே! அது முடியாது. நேர்மை இல்லாத மனிதர், மற்றொரு நேர்மை இல்லாத மனிதரைக் கண்டு, 'அவர் நேர்மை இல்லாதவர்', என்று தெரிந்து கொள்ள இயலாது.  ஆனால், ஒரு நேர்மை இல்லாத மனிதர், ஒரு நேர்மையான மனிதரைக் கண்டு, 'அவர் ஒரு நேர்மையானவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா? "முடியாது, ஐயா." "நல்லது, துறவிகளே! அதுவும் முடியாத காரியம். ஒரு நேர்மை இல்லாதவர், தீய பண்புகளையும், தீயோ