Posts

Showing posts from July, 2023

பாந்தே அறிவுரை

ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது முக்கியம். அதனால் நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. நம்மை சுற்றி இருப்பவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. நமக்கு நாமே மற்றும் நாம் பிறருக்கு தரும் அன்பளிப்பு அது. நமக்கு புண்ணியம் சேரும். இம்மையில் மகிழ்ச்சி தரும் மறுமையில் சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லும். [1]  அப்படி கடைபிடிக்க முடியவில்லையென்றால் பரவாயில்லை. 'அட, இந்த ஒழுக்கத்தை காப்பாற்ற முடியவில்லையே!', என்று நினைத்து வருத்தப்படுவதில் பயனில்லை.  ஆனால் முக்கியமாக, விரைவில் ஒன்றைச் செய்ய வேண்டும்.   மீண்டும் ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதற்கு நேர்ந்துக் கொள்ள வேண்டும். மீண்டும் நேர்ந்துக் கொள்ளும் வரை அது ஒரு ஆபத்தான காலம். பாதுகாப்பு இல்லாத காலம்.  ஒரு புத்தர் உருவத்தின் முன் அல்லது நாமே மனதில் ஐந்து ஒழுக்க விதிகளை சொல்லிக் கொள்ள வேண்டும்.  எந்த உயிரையும் கொல்லுதலைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். பிறர் பொருளை களவு செய்வதைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். தவறான பாலியல் உறவுகளைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். [2] தவறான பேச்சு உரைப்பதைத் தவிர்கும் ஒழுக்க விதிய

தேவதா சுத்தம் - ஒரு தேவன்

  பொதுவாக கீழ் உலகத்தில் பிறந்தவர்கள் தான் வருத்தப்படுவார்கள் என்று நாம் நினைக்கலாம். அதாவது நரக, மிருக, பூத உலகங்களில் பிறந்தவர்கள். மனிதர்களாக வாழ்ந்த போது, நற் பண்புடனும் விவேகத்துடனும் நடந்துக் கொண்டு புண்ணியம் சேர்த்திருந்தால் தமக்கு இந்த கொடுமையான நிலை வந்திருக்காது என்று நினைத்து வேதனைப்படுவார்கள்.  ஆனால் சொர்க்க லோகத்தில் பிறந்தவர்களும் வருத்தப்படலாம் என்பதை இந்தச் சுத்தம் விளக்குகிறது முக்கியமாக இந்த சுத்தம் விவேகத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தையும், அறத்தைப் பயில கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. படிப்படியாக மேல் செல்லும் தேவலோகங்கள்: மண்ணுலக தேவர்கள் சாதும்மஹாராஜிக தேவர்கள் தாவதிங்ச தேவர்கள் யாம தேவர்கள் துசித தேவர்கள் நிம்மாணரதீ தேவர்கள் பரனிம்மிதவசவத்தி தேவர்கள் ... ஆபஸ்ஸர தேவர்கள் பரித்தசுப தேவர்கள் ... சுதஸ்ஸீ தேவர்கள் பிரம்ம லோக தேவர்கள் Devatāsutta, A Deity AN 9.19 தேவதா சுத்தம் - ஒரு தேவன் அங்குத்தர நிகாயம் 9.19 "துறவிகளே இன்று இரவு பல பிரகாசமான தேவர்கள் ஜெதவனத்தை ஒளிமயமாக்கியவாரு என்னிடம் வந்து, வணங்கி, ஒருபுரம் நின்று சொன்னது

புகழை நாடி

 மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்று நினைப்பது சரியா? இது ஆணவம் சம்பந்தப்பட்டது, எனவே அவ்வாறு விரும்புவதாகாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் புத்தர் ஒழுக்கத்துடன் வாழ்பவர் அதன் காரணமாக மற்றவர் தம்மை புகழ வேண்டும் என்று விரும்புவது சரியே என்கிறார். இதிவுத்தகா #76 Itivuttaka குத்தக நிகாயம் மகிழ்ச்சியை நாடுவது இது பகவான் புத்தர் சொன்னது... "துறவிகளே, மூன்று வகையான மகிழ்ச்சியை விரும்பி, நல்லறிவுடையார் தமது ஒழுக்கத்தை காப்பாற்றுகிறார். அந்த மூன்று எவை? 'என்னை நாடிப் புகழ் வர வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார். 'நான் செல்வந்தராக வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார். 'உடல் அழியும் சமயத்தில், மரணத்தின் போது நான் சொர்க்கலோகத்தில் மறுபிறப்பெடுக்க வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார்.. இந்த மூன்று மகிழ்ச்சிகளை விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டும்."

பாந்தே அறிவுரை

பௌத்தத் துறவிகள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் ஒரு வலிமை மிகு கேள்வி, உங்கள் பாதங்களை நீங்களே வணங்குவதற்கு தயாரா?', என்பதுதான். முடியும் என்றால் அருமை! தொடர்ந்து உள்ளபடி செயல்படுங்கள்.  முடியாது என்றால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் புதிதாக செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன. அதன் மூலம் உங்களையே நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கால்களையே நீங்கள் வணங்குதற்கு தகுதி பெறும் வரை.