Posts

Showing posts from March, 2023

விஷப் பாம்பு உவமானம்

Image
  விஷப் பாம்பு உவமானம் Āsīvisopamasutta  Āsīvisa - விஷப் பாம்பு Upamā - உவமை சங்யுத்த நிகாயம் SN 35.238   பிறவியிலுள்ள (இம்மையிலும் மறுமையிலும்) ஆபத்தினையும், அதிலிருந்து தப்பிக்க வழியையும் - விஷப்பாம்புகள், கொலைக்காரர்கள், வெறுமையான கிராமம், கொள்ளையர்கள்.. என்று பல வலிமையான உவமானங்களின் கோர்வையாக விளக்கம் தருகிறார் புத்தர். ஃஃஃ "துறவிகளே, நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம், வாழ விரும்பும் ஒருவர், மரணம் விரும்பாதவர், மகிழ்ச்சியை விரும்புபவர், துன்பத்துக்கு அஞ்சுபவர் அங்கு வருகிறார். அவரிடம் இவ்வாறு சொல்வார்கள்: 'ஐயா, இங்கு நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது எடுத்து, குளிப்பாட்டி, உணவூட்டி, தூங்க வைக்க வேண்டும். ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் உறுதியாக மரணம் தழுவவேண்டியிருக்கும் அல்லது உங்களுக்கு மரண வலி ஏற்படும். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.' அதைக் கேட்ட அந்த மனிதர் அந்த நான்கு விஷப் பாம்புகளுக்கு பயந்து, அங்கிருந்து, தப்பிக்க,

எண்ணங்களை நிறுத்த ஐந்து வழிகள்

  எண்ணங்களை நிறுத்த ஐந்து வழிகள் விடக்க சந்தான சுத்தம் Vitakka saṇṭhāna sutta   Vitakka - எண்ணம், எண்ணுவது Santhana - சாந்தப்படுத்தல்  மஜ்ஜிம நிகாயம் MN 20 (சுருக்கம் மட்டும்) காமம், வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை) பொருந்திய திறமையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றினால், அவற்றை நீக்க, இந்த ஐந்து  வழிகளை பயன்படுத்தலாம் என்று புத்தர் கூறினார். 1. தீய எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, வேறு ஏதேனும் சாமர்த்தியமான எண்ணங்களை நினைக்க வேண்டும். அப்போது அந்த தீய எண்ணங்கள் மறைந்துவிடும். இது ஒரு தச்சர் அல்லது அவரது உதவியாளர், ஒரு பெரிய மரவாணியை   (மரத்தாலாகிய ஆணி) ஒரு சிறிய மரவாணியைக் கொண்டு வெளியே எடுப்பதற்கு ஒப்பாகும்.  2. அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் தொடருமானால், அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்: 'உண்மையிலேயே, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் திறமையற்றவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் பழித்தற்குரியவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் துன்பத்தைத் தருவன.' இவ்வாறு நினைக்கும் போது அந்த எண்ணங்களின் தாக்கம் மெல்லக் குறைந்து விடும்.  இது, கண்ணாடியின் முன் நின

ஒரு அன்பளிப்பின் தூய்மை

  ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்துவது எப்படி? (மஜ்ஜிம நிகாயம் MN142 சுருக்கம், ஒரு பகுதி மட்டும்) "ஆனந்தா, நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்தலாம். எந்த நான்கு? தருபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. பெறுபவரால் அல்ல.  -   தருபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர். பெறுபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். பெறுபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவரால் அல்ல. - தருபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். பெறுபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்.  தருபவர், பெறுபவர் இருவராலும் ஒரு அன்பளிப்பு  தூய்மைப்படுத்தப்படாமல் போகிறது. - தருபவர், பெருபவர் இருவரும் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். ஒரு அன்பளிப்பு தருபவராலும், பெறுபவராலும் தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவர், பெருபவர்  இருவரும் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்." இந்த நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. மேலும் அந்த கருணை உடைய புத்த பகவான் சொன்னது: "ஒழுக்கமுடைய ஒருவர், இனிய மனதோடு  நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை,  நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஒழுக்கம் இல்லாதோருக்கு தரும

வேலாமர் பற்றி

 வேலாமர் பற்றி About Velāma அங்குத்தர நிகாயம் AN 9.20 சுருக்கம்:  நாம் செய்யும் தானம் - அது சாதாரணமாக இருக்கலாம் அல்லது  சிறப்பாக இருக்கலாம்  - அதை கவனத்தோடும், முன் யோசனையுடனும் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த தானத்தின் விளைவு வெளிப்படும்போது, அதனை மகிழ்வோடு அனுபவிக்க முடியும். மேலும், அந்த தானத்தின் காரணமாக சேரும் புண்ணியம், பெறுபவரின் மனப்பக்குவத்தை பொறுத்தும் இருக்கிறது.  ஒரு காலத்தில் வேலாமர் என்ற செல்வந்தர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பொருள் தானம் செய்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால், அதை பெறுதற்கு தகுதியானவர் எவரும் இல்லை.  புத்தர் தோன்றாத காலம் அது. எண் வழி பாதையை பின்பற்றுவோர் யாரும் இல்லாத காலம் அது. தானத்தினால் வரும் பலனை விட மேன்மையானது, மும்மணிகளிடம்  சரண் செல்வது.  அதைவிட மேன்மையானது ஐந்து ஒழுக்கங்களை கடைபிடிப்பது.  அதைவிட மேன்மையானது எல்லையற்ற  அன்பை, பாகுபாடின்றி, உள்ளத்தில் வளர்ப்பது.  இவை அனைத்தையும் விட மேலான ஒன்று - ஒரு நொடியேனும் நிலையாமை உணர்த்தல்.  ஃஃஃ வேலாமர் பற்றி ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே,  ஜேத வனத்தில்,

சர சுத்தம் - நடக்கையில்

 சர சுத்தம் - நடக்கையில் AN4.11 Carasutta - Walking சச்சித்த சுத்தத்தினை (AN 10.51) விளக்கிய ஒரு பாந்தே, அதனுடன் இந்த சர சுத்தத்தினையும் குறிப்பிட்டார். ஏனென்றால், இரண்டும் ஒரே கருத்தினை, அதாவது மனதில் தோன்றும் குற்றங்களை உடனடியாக நீக்குவது நல்லது என்ற கருத்தினை முன்வைக்கின்றன. சச்சித்த சுத்தம் சுருக்கம்: கண்ணாடியில் பார்க்கும்போது, முகத்தில் ஏதேனும் குறை, கரை இருக்குமேயானால், அதனை உடனடியாக சரி செய்கிறோம். அதேபோல உள்ளத்தில் ஏதேனும் குறை இருக்கின்றதா என்று, தம்மம் என்னும் கண்ணாடியில் அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டும்.  மேலும், தலை தீப்பற்றிக் கொண்டிருந்தால் எவ்வளவு வேகமாக செயல்பட்டு அதை அணைக்க பார்ப்போமோ, அதே அவசரத்துடன் உள்ளத்தில் உள்ள குறைகளையும் நீக்க வேண்டும். சர சுத்தம் சுருக்கம்: ஒருவரின் உடல் எந்த நிலையில் - நடக்கும், உட்கார்ந்த, நிற்கும், படுத்த - நிலையில் இருந்தாலும், மனதில் சாமர்த்தியமற்ற என்னப்போக்கு தோன்றினாள், அதனை உடனடியாக நீக்குவது நல்லது. ஃஃஃ துறவிகளே, ஒரு துறவி நடந்து கொண்டிருக்கும் போது அவர் மனதில் சிற்றின்ப, துஷ்டத்தனமான அல்லது கொடிய எண்ணம் தோன்றுவதாக எடுத்துக் கொ

சச்சித்த சுத்தம்

  சச்சித்த சுத்தம் AN  10.51 Sacitta Sutta  Your Own Mind உங்கள் மனம் ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே,  ஜேத வனத்தில், அனாதபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார்.  அவர் துறவிகளிடம், "துறவிகளே!"  என்று அழைத்தார்.  "ஐயா," என்று கூடியிருந்த துறவிகள் பதிலளித்தனர். "துறவிகளே, மற்றவர் மனதை அறியும் சாமர்த்தியம் ஒரு துறவிக்கு இல்லை என்றால், அவர்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும், 'நான் எனது மனதின் நடவடிக்கைகளில் சாமர்த்தியமாக இருப்பேன்.' ஒரு துறவி எப்படி தனது மன நடவடிக்கைகளில் சாமர்த்தியமாக இருப்பது? உதாரணமாக, இளைய பருவத்தில் உள்ள ஒரு பெண்ணையோ, ஆணையோ எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆபரணங்களை அணிவதற்கு,  அழகிய துணிமணிகளை உடுத்துவதற்கு ஆசை. எனவே அவர்கள் ஒரு கண்ணாடி முன் தங்களின் பிரதிபிம்பத்தை பார்ப்பார்கள். ஏதேனும் அழுக்கோ, குறையோ தென்பட்டால் உடனடியாக அதனை நீக்கிவிடுவார்கள். எந்தக் குறையும் இல்லை என்றால்,  தாங்கள் விரும்பிய படி கண்ணாடியில் தோன்றுவதால் அவர்களுக்கு சந்தோஷம். 'நான் சுத்தமாக இருப்பது எனது பாக்கியம்', என்று நினைத்துக் கொள்வார்கள். அதே