Posts

Showing posts from February, 2024

Karajakāya sutta

 Feb 25, 2024 பாந்தே Sasanawanse தொடர்ந்து மெத்தா பாவனை செய்வதன் நன்மைகளைப் பல சுத்த உதாரணங்களை கொண்டு பாந்தே விளக்கினார். அவற்றுள் சில... ஃஃஃ அங்குத்தர நிகாயம் AN10.219 Karajakāya sutta வினை தோற்றுவித்த இந்த உடல் சுத்தம் (சுருக்கம்) பகவான் புத்தர் கூறுகிறார்: "தீவினை செய்திருந்தால் அதன் பலனை அனுபவிக்காமல் துன்பத்தின் முடிவுக்கு வர முடியாது. அந்த வினைப் பயனை இந்த வாழ்க்கையில் அல்லது அடுத்த வாழ்க்கையில் அல்லது அதன் பின் தொடரும் வாழ்க்கைகளில் அனுபவிக்க நேரிடும். (அந்த தீவினைப் பலனைக் குறைப்பது எப்படி?) ஒரு மேன்மையான சீடர்  பேராசை இல்லாமல்,  பகைமை இல்லாமல்,  குழப்பம் இல்லாமல்,  தெளிவான மனதுடன்  தம்முள்ளத்தில் அன்பு நிறைந்தவராக அந்த அன்பை ஒரு திசையில் பரப்புகிறார். பின் இரண்டாம், மூன்றாம், நான்காம் திசைகளில் பரப்புகிறார். அதே போல மேல் திசையிலும் கீழ் திசையிலும் உலகம் முழுவதற்கும் தன் அன்பை செலுத்துகிறார் - நிறைந்த, பரந்த வரையறையற்ற, பகைமையற்ற அன்பு அது. அவர் இவ்வாறு அறிகிறார்: 'முன்பு எனது உள்ளம் அளவானதாக, வளர்க்கப்படாமல் இருந்தது. இப்போது அது அளவற்றதாகவும் நன்றாக வளர்க்கப்பட்டு

கேள்வியும் பதிலும்

  Feb 11, 2024  பாந்தே Sasanawanse  பாந்தேவுடன் கேள்வியும் பதிலும் (கேட்டதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதப்பட்டது. பிழைகளுக்கு நானே பொறுப்பு) கேள்வி: எல்லாம் அநிச்சம் என்று சொல்லப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பின் அதன் முடிவுகள் நாம் விரும்பியபடி இல்லாவிட்டால், நாம் எதுவும் செய்யாமல் இருந்துவிடலாமே? அநிச்சத்தின் காரணமாக தானாக சரியாகி விடலாம் அல்லவா? பதில்: இல்லை, இல்லை. உடலை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். உடலில் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்படி கேட்க வேண்டும். தரப்படும் மருந்துகளை அவர் சொன்னபடி உட்கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தவரை உடலை கவனித்துக் கொள்ள வேண்டும்.  ஆனால், ஒரு நாள் உடலின் பிணியை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாத நிலை வரும். அதனால் தான் இந்த உடல் நிலையற்றது, அநிச்சம் என்று சொல்கிறோம். ஃஃஃ கேள்வி: தமிழ்நாட்டில் பௌத்தம் என்றால் கடவுள் இல்லாத மதம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் கடவுளரை பற்றியும், தேவர்களைப் பற்றியும் அவர்களை வணங்குவதைப் பற்றியும் கூறுகின்றீர்கள். பதில்: புத்தர் ஒரு கடவுள் இல்லை.   ஆனால் பௌத்

சப்பாசவ சுத்தம் 2/2

 சப்பாசவ சுத்தம் MN2 மஜ்ஜிம நிகாயம் உள்ளக் கறைகளெல்லாம் Part 2 கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் 12. "துறவிகளே, கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் எவை? [11] இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து கட்புலனை அடக்கி வாழ்கிறார். கட்புலனை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் கட்புலனை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. [12] விவேகத்துடன் சிந்தித்து செவிப்புலன் அடக்கி வாழ்கிறார்...மோப்பத்தை அடக்கி...சுவையை அடக்கி...தொடுவுணர்வுப்புலனை அடக்கி... மன உணர்வை அடக்கி..... புலன்களை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் புலன்களை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள். பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள்   13. "துறவிகளே, பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் எவை? [13] இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து, தனது சீவர ஆடையை தன்னை குளிரிலிருந்து பாதுகாக்கவும், வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், ஈக்கள், கொசுக்கள் ஆகியவற்றின் கடிகள

சப்பாசவ சுத்தம் 1/2

 சப்பாசவ சுத்தம் MN2 மஜ்ஜிம நிகாயம் உள்ளக் கறைகளெல்லாம் 1. நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனாதபிண்டிகரின் விகாரத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது அங்கு இருந்த பிக்குமார்களுக்கு அவர் உரையாற்றினார். "துறவிகளே." - "அண்ணலே!" என்று துறவிகள் பதிலளித்தனர்.    2. துறவிகளே, உள்ளத்தின் கறைகளை [1] கட்டுப்படுத்த ஒரு போதனையை கற்பிக்கப் போகிறேன். நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்."- "சரி, அண்ணலே," என்று துறவிகள் பதிலளித்தனர். பகவர் இவ்வாறு போதித்தார்:  சுருக்கம்  3."துறவிகளே, அறிந்து உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே கறைகளை அழிக்க முடியும். அறியாதவர்களுக்கு, உணர்ந்துகொள்ள முடியாதவர்களுக்கு அது முடியாது. கறைகளை அழிக்க என்ன அறிய வேண்டும், எதனை உணர வேண்டும்? அவை இரண்டு: விவேகத்துடன் அவதானித்தல் (கவனம் செலுத்துதல்), விவேகமற்ற அவதானம் [2]. ஒருவர் விவேகம் இல்லாமல் கவனம் செலுத்தினால் இதுவரை தோன்றாத கறைகளும் தோன்றும், ஏற்கனவே தோன்றிய கறைகளும் பெருகும். விவேகத்தோடு கவனம் செலுத்தும் போது இதுவரை தோன்றாத கறைகள் தோன்றுவதில

தேவர்களும் தேவ உலகங்களும்

  Feb 4 போதனை சாரம்சம் பாந்தே Sasanawanse தேவர்களும் தேவ உலகங்களும் உள்ளதாக புத்தர் கூறினாரா? ஃஃஃ பிக்குமார்கள் தங்களை வணங்குவோரை, இந்த (தம்மபதம் 109) செய்யூளோடு ஆசீர்வதிப்பார்கள்: Abhivadana silissa niccam vuddhapacayino cattaro dhamma vaddhanti ayu vanno sukham balam. எப்போதும் (niccam) ஞானத்தினாலும் வயதினாலும் மூத்த பெரியோர்களை வணங்குகிறவர்களுக்கும் (vuddhapacayino),  சீலங்களை கடைபிடிப்பவர்களை வணங்குகிறவர்களுக்கும் (Abhivadanasilissa)  ஆயுள் (ayu),  அழகு (vanno),  இன்பம் (sukham),  ஆற்றல் (balam)  ஆகிய நான்கும் (cattaro dhamma) அதிகரிக்கும் (vaddhanti). இரண்டு வாரங்களுக்கு முன்பு மட்டக்குண்டலி பற்றி அறிந்தோம். அவர் புத்தரை வணங்கிய ஒரே காரணத்தால் தேவலோகத்தில் மறுபிறப்பெடுத்து திவ்ய ஆயுள், திவ்ய அழகு, திவ்ய இன்பம், திவ்ய ஆற்றல் கண்டார். (விமான வத்து 7.9 மட்டக்குண்டலியின் அரண்மனை) ஆம், தேவர்கள், தேவலோகங்களைப் பற்றி புத்தர் கூறியுள்ளார். சங்யுத்த நிகாயத்தில் தேவர்கள் பற்றிய போதனைகள் (Devaputtasaṁyutta SN 2), பிரம்மதேவர் பற்றிய போதனைகள் (Brahmasaṁyutta SN 6), சக்கர் பற்றிய போதனைகள்

Jan 28 போதனை

பாந்தே Sasanawanse தியானத்தில் விருத்தியடைதல் எப்படி என்பதே Jan 28 போதனையின் சாரம்சம். பாந்தே குறிப்பிட்ட சில கருத்துக்கள்: ஃ ஆனாபானா சதி தியானம் (உன் மூச்சு வெளி மூச்சு கவனித்தல்) செய்வதில் சிரமம் இருந்தால் முதலில் மெத்தா (எல்லா உயிர்கட்கும் வரையறையற்ற அன்பு செலுத்துதல்) தியானத்தோடு தொடங்குங்கள் அல்லது புத்தானுஸ்ஸதி தியானம் (புத்த பகவானின் ஒன்பது பண்புகளை நினைவுகூரும் தியானம்) தியானத்தோடு தொடங்குங்கள். மெத்தா தியானம்: https://youtu.be/dtI8qiBEcaU?feature=shared ஃ மெத்தா தியானம் பயில்வதன் நன்மைகளுல் ஒன்று: மனத்தை விரைவாக ஒரு நிலைப்படுத்த முடிவது. ஃ ஐந்து சீலங்களை கடைப்பிடிப்பது நல்லது. பொறிகளை கட்டுப்படுத்தி இருப்பது நல்லது. இதனால் தியானத்தில் முன்னேறலாம். indriya-saṃvara-sīla விகாரைக்கு போக முடிந்தால், அவ்விடத்தை சுத்தம் செய்தல் பிக்குமார்களுக்கு உதவுதல் போன்ற புண்ணியச் செயல்கள் சீலத்தை முழுமையடையச் செய்யும். ஃ காலை நேரங்களில் தியானம் செய்வது நல்லது. ஃ சீலங்களை கடைப்பிடிக்க உதவும் மற்றொரு விஷயம்: வெட்கம்-அச்சம் (ஹிரீ-ஒத்தாப்ப) இருப்பது நல்லது. ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன்