Posts

Showing posts from February, 2023

மும் மணி சரணம்

  மும் மணி சரணம் (திரி சரணம்) புத்தங் சரணங் கச்சாமி! தம்மங் சரணங் கச்சாமி! சங்கங் சரணங் கச்சாமி! துதியம்பி (இரண்டாம் முறையாக)...  ததியம்பி (மூன்றாம் முறையாக)... மும்மணிகளிடம் சரியான வழியில் சரண் செல்லும்போது நமக்கு அவற்றிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். . ஃஃஃ உத்தமரான, தூய்மையான, சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்ற புத்தருக்கு உணவு தானம் செய்வதை விட, புத்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு உணவு தானம் செய்வதை விட, அவர்களுக்கு இருப்பிடம் கட்டிக் கொடுப்பதை விட, மேன்மையானது - புத்தர் தர்மம் சங்கத்திடம் அடைக்கலம் செல்வது.  [ஆதாரம்: AN9.20 வேலாமா பற்றி] ஃஃஃ புத்தரிடம் சரண் செல்லும்போது அவருடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தர் போதிசத்துவராக இருந்தபோது நம்மைப் போல் மனதில் துன்பம் அனுபவித்தார். எனவே அவருக்குள் நாம் இருக்கின்றோம். அதே சமயம் நமக்குள் அவர் இருக்கின்றார். ஏனென்றால் சரியாகப் பயிற்சி செய்தால் நாமும் அவரைப் போல் ஞானம் பெறலாம்.  அதேபோல் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வழி (அவை முழு நிறைவடையவில்லை என்றாலும்) ஓரளவுக்கு நமக்கு தெரியும். எனவே நமக்குள் தம்மமும் இருக்கின்றத

காக்கை ஜாதகக் கதை

Image
  https://youtu.be/AWtzr8Qa8wI காக்கை ஜாதகக் கதை (புத்தரின் முன் பிறவிக் கதை) Kāka Jataka  முன்னொரு காலத்தில், இந்திய மண்ணில் போதிசத்துவர் ஒரு காகமாக பிறந்தார்.  இன்று போலவே அக்காலத்திலும் காகங்கள் தங்கள் பிழைப்புக்காக, உணவை குப்பை கூடங்களிலிலும், மற்ற இடங்களிலும் தேடின. ஊரின் எல்லைக்கு உள்ளேயும், எல்லைக்கு வெளியே கிராமங்களிலும், காடுகளிலும், வயல்களிலும் உணவைத் தேடின.  போதி சத்துவர் ஒரு பெரிய காக்கை கூட்டத்தின் தலைவராக இருந்தார். அந்த கூட்டம் காசி நகருக்கு வெளியே ஒரு வனத்துடன் சேர்ந்து இருந்த ஒரு இடுகாட்டில் வாழ்ந்து வந்தது.  ஒரு நாள் காலை நேரத்தில் மன்னரின் தலைமை புரோகிதர்  கிழக்கு வாயிலாக நகரிலிருந்து வெளியேறி,  கங்கை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றார். அவர் குளித்த பிறகு நல்ல துணிகளை அணிந்து கொண்டு, நறுமணங்களை பூசிக்கொண்டு மல்லிகை பூ மாலையை கழுதில் அணிந்தவராக   ஊர் பக்கமாக திரும்பிச் சென்றார். அச்சமயம் இரண்டு காக்கைகள் நகரின் வாயில் கதவுக்கு மேல் இருந்த வளைவில் உட்கார்ந்து கொண்டிருந்தன. ஒரு காக்கை மற்றதிடம் சொன்னது: "அங்கே தெரிகிறதா, அந்த புரோகிதர் குளித்துவிட்டு திரும்பி வருவது!

மனித பிறவி ஒரு மங்களம்

Image
மகா போதி சொசைட்டி லதாக், தலைமை பிக்குவான போற்றுதற்குரிய சங்கசேனா பாந்தே அவர்களின் பெங்களூரு விஜயம் தம்ம உரை தொகுப்பு. "புத்தரின் திருவடிகளை வணங்குகிறேன், (மறைந்த) படாபாந்தே அவர்களின் திருவடிகளை வணங்குகிறேன், மேடையில் இருக்கும் சங்கத்தினருக்கும், இந்த அழகிய  மண்டபத்தில் கூடியிருக்கும் சாமநேரர், அனகாரிகர், உபாசக, உபாசிகர்களுக்கு எனது காலை வணக்கம். எனது உள்ள பூர்வமான அன்பை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.  இந்த  நிலையற்ற, நிச்சயமற்ற, உறுதியற்ற,  மாற்றம் மிகு உலகில் நாம் இந்த அழகிய மண்டபத்தில் மற்றும்  ஒரு நாள் கூடி இருப்பது, ஒரு மங்களமான விஷயம். பொதுவாக வாழ்க்கையில் செய்யும் செய்கைகளை ஒதுக்கிவிட்டு, நாம் இந்த தியான மண்டபத்தில் கூடியிருக்கின்றோம். தகுந்த நேரத்தில் தர்ம உரை கேட்பதும், தகுந்த நேரத்தில் தர்மத்தைப் பற்றி கலந்து உரையாடுவதும் ஒரு மங்களம்.   நாம் அனைவரும் மங்களங்களை தேடுகிறோம், அல்லவா? மகிழ்ச்சியை தேடுகிறோம். நல்ல உறவுகளை, நல் உடல் நலத்தை, செல்வத்தை, அழகிய வாழ்க்கையை தேடுகிறோம். ஆனால் இவற்றை விரும்பினால் மட்டும் கிடைத்துவிடாது.  எங்கிருந்து அந்த உண்மையான, மேலான மங்கலங்க