Posts

Happy Vesak

 Happy Vesak/Buddha jayanthi.  Today marks the birth, enlightenment and passing away of the Buddha. (Recently heard talk) The Buddha taught gratification, its danger and the escape (Saṁyutta Nikāya 22.26). We live in a sensual world. We have 6 senses and we seek gratification through them.  Eyes through forms Ears through sound  Tongue through taste  Nose through smells Body through touch Mind through thoughts  Nothing wrong there.  But know the danger in excess. Don't cross boundaries. People kill, steal, lie etc. to get what they want. Keep the 5 precepts. It's for our own protection.  Just this: following 5 precepts, practicing generosity and cultivating unconditional love for all beings will lead one to much happiness in this life and a good rebirth in the next. Then there's the next level up. Escape. At some point as wisdom develops, one realizes this constant seeking of gratification in the external world is not satisfactory. Return is diminishing. People get bore

புத்தரின் ஒன்பது பண்புகள்

 (இலங்கை Sasanawanse பாந்தே அவர்களின் ஞாயிறு இரவு போதனையில் குறிப்பிடப்பட்டது...) Buddhanusati தினசரி காலை எழுந்தவுடன் அல்லது வெளியே போகும் முன்பு புத்தரின் ஒன்பது பண்புகளை நினைவு கூறுதல் நல்லது. அதாவது  1. அவர் ஒரு அருகர் Arahaṃ (the Holy One), 2. சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றவர் Sammāsambuddho (fully enlightened), 3. முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர் Vijjācaraṇa sampanno (endowed with clear vision and virtuous conduct),  4. நல்ல வழியில் சென்றவர் Sugato (sublime),  5. பிரபஞ்சத்தை அறிந்தவர் Lokavidū (the knower of worlds),  6. கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர் Anuttaro purisadammasārathi (the incomparable leader of men to be tamed),  7. தேவர்களுக்கும் மனிதர்க்கும் ஆசிரியர் Satthā devamanussānaṃ (the teacher of gods and men), 8. விழிப்புற்றவர் Buddho (enlightened),  9. ஆசிர்வதிக்கப்பட்டவர் Bhagavā (blessed). இதைப் பற்றி அன்றைய இந்தியாவின் வட மேற்கு பகுதியை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தருக்கும் பௌத்த துறவி நாகசேனருக்கும் இடையே நடந்த பிரபலமான உரையாடல் தொக

மெத்தா - பதினோறு அனுகூலங்கள்

  Feb 18, 2024  பாந்தே Sasanawanse மெத்தா (எல்லையற்ற அன்பு) தியானம் செய்வதன் 11 பயன்கள். (அங்குத்தர நிகாயம் AN11.15) அன்பைப் பயின்று, அன்பை வளர்த்து, அன்பைப் பெரிது படுத்தி, அன்பை ஒரு வாகனமாக, அடித்தலமாக அமைத்து, அன்போடு நெருங்கியிருப்பதால், அதனை நன்கு நிறுவுவதால் மனம் விடுதலையடைகிறது. அதனால் விளையும் பதினோறு அனுகூலங்கள்: 1. ஒருவர் மகிழ்ச்சியாகக் தூங்குகிறார்,  2. மகிழ்சியாக விழிக்கிறார்.  3. கெட்ட கனவுகள் காண்பதில்லை.  4-5. மனிதர்களும் மனிதரல்லாதவரும்‌ (அமனுஸ்சர்) அவரை நேசிக்கின்றனர்.  6. தேவர்களால் அவர் காக்கப் படுகிறார்.  7. தீ, நஞ்சு மற்றும் வாட்கள் (ஆயுதங்கள்) ஆகியவை அவரை பாதிப்பதில்லை. 8. மனத்தை விரைவாக ஒரு நிலைப்படுத்துகிறார்.  9. தோற்றப் பொலிவுடன் காணப்படுகிறார்.  10. தடுமாற்றம் ஏதுமின்றி அவர் இயற்கையெய்துகிறார்.  11. மேற்கொண்டு அவர் தன்னை வளர்த்துக் கொள்ளாமலிருந்தாலும் (இம்மையில் நிப்பாண நிலை அடையா விட்டாலும்), மறுமையில் குறைந்தபட்சம் அவர் பிரம்மலோகத்திலாவது பிறப்பார். (தமிழில்: திரு தி. சுகுணன்) Eleven advantages are to be looked for in the freedom of mind through the practic

ஒழுக்கங்கள்

  பாந்தே Sasanawanse இந்த வாரம் பாந்தே கற்பித்த பல விஷயங்களுள் ஒன்று, ஒரு கேள்விக்கான பதில் - ஐந்து ஒழுக்கங்கள் கடைப்பிடிப்பதால் வரும் ஐந்து அனுகூலங்களைப் பற்றி. அந்த ஐந்து நன்மைகளில் நான்கை இம்மையிலேயே காணலாம்.  புத்த பகவான்:   "இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் நல்லொழுக்கத்தின் காரணமாக அவருக்கு ஐந்து அனுகூலங்கள் கிடைக்கின்றன. எந்த ஐந்து?  அவர் விவேகத்துடன் வாழ்கின்றபடியால், பெரும் செல்வத்தைச் சேர்க்கிறார். இதுவே முதல் அனுகூலம்.  அவர் புகழ் பரவுகிறது. இதுவே இரண்டாம் அனுகூலம்.  மேலும், அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வாராயின், அது க்ஷத்திரியர்கள், பிராமணர்கள், இல்லறத்தார் அல்லது தியானிகளின் கூட்டமாக இருக்கலாம் - அந்த ஆண் அல்லது பெண் தன்னம்பிக்கையுடன், கூச்சப்படாமல், தலை நிமிர்ந்து கலந்து கொள்வார். இதுவே மூன்றாம் அனுகூலம் இது.  மேலும், அவர் இறக்கும் போது தெளிந்த மனத்தோடு இறப்பார். இதுவே நான்காம் அனுகூலம். மேலும் அவர் உடல் சிதைந்த பின், மரணத்தின் பின் நல்ல மறுபிறப்பெடுப்பார். சொர்க்கத்தில் பிறப்பார். இதுவே ஐந்தாம் அனுகூலம். இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தி

வஜிராருடன்

  சங்யுத்த நிகாயம் 5.10 Vajirāsutta வஜிரா சுத்தம் ஆதாரம்: https://suttacentralnet/sn5.10 With Vajirā வஜிராருடன் சாவத்தியில். முற்பகலில் பிக்குணி வஜிரா சீவர ஆடைகளை சீர் செய்துக் கொண்டு, பிச்சா பாத்திரத்துடன் சாவத்தி நகருக்குள் உணவு பெறுவதற்குச் சென்றார். சாவத்தியில் உணவுக்காக நடந்தார். இரந்த உணவை அருந்திவிட்டு திரும்பிய பின்னர், இருண்ட காடு எனப்படும் வனத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று ஒரு மரத்தினடியில் அந்த நாள் தியானத்திற்காக அமர்ந்தார்.  அப்போது மாரன் என்ற தீயவன் (காம உலகத் தலைவன்) பிக்குணி வஜிராவிற்கு பயம் உணர்த்துவதற்காக, அச்சத்தாற்கலங்கவைப்பதற்காக, மயிர்சிலிர்கச்செய்வதற்காக, அவரது தியானத்தை குலைக்கும் நோக்கத்தோடு அவரிடம் சென்று இவ்வாறு பாவடிவில் சொன்னான்: "யார் தோற்றுவித்தது இந்த உயிரை? அதைத் தோற்றுவித்தவர் எங்கே? எங்கு தோன்றியது இந்த உயிர்? அது எங்கு மறையும்?" பிக்குணி வஜிரா இவ்வாறு நினைத்தார், "இந்த பாவடிவில் பேசுவது யார்? மனிதனா, மனிதரல்லாதவனா?" பின் இவ்வாறு நினைத்தார், "இது தீயோன் மாரன். எனக்கு பயம் உணர்த்துவதற்காக, என்னை அச்சத்தாற்கலங்கவைப்பதற்காக, மயிர

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

Image
    பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்.. புண்ணியம் இன்றி விலங்குகள் போல்.. In spite of taking human birth on Earth... living like animals, not doing meritorious acts காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்.. காலமும் செல்ல மடிந்திடவோ.. Hearts filled with lust and anger.. To waste away and die as time runs out ... உத்தம மானிடராய் பெரும் புண்ணிய.. நல்வினையால் உலகில் பிறந்தோம்.. Due to good actions in past lives  We have taken this high human birth.. சத்திய ஞான தயாநிதி யாகிய.. புத்தரை போற்றுதல் நம் கடனே.. To praise the fully enlightened and compassionate Lord Buddha is our duty.. உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்.. இல்லையெனில் நர ஜென்மமிதே.. Without Truth, Love and Non-violence  this life would be hell.. மண்மீதில் ஓர் சுமையே பொதிதாங்கிய..பாழ்மரமே வெரும் பாமரமே.. (அறிவிலியாக (பாமரம்) வாழ்பவன், இந்த பூமிக்கு சுமையாக (பொதி - மூட்டை load) இருக்கும் அழுகிப்போன மரத்தைப் (பாழ்மரம்) போல) One who lives life in ignorance is a burden (to himself and to others), like a rotten tree is to Earth.. ____

மத்தா என்ற பேய்

  Mar 3, 2024 பாந்தே Sasanawanse போதனையில் விளக்கப்பட்ட சுத்தம் பேத வத்து (பேய்க் கதைகள்) Pv 2.3 மத்தா சுத்தம் மத்தா என்ற பேய் சிறு தீச்செயல்களும் பெரும் துன்பத்திற்கு எடுத்துச் செல்லக்கூடும் என்பதை விளக்கும் கதை. திஸ்ஸா என்ற இல்லாள் ஒரு பெண் பேய்யைப் பார்த்து இவ்வாறு கேட்கிறாள், திஸ்ஸா: நிர்வாணமாகவும் அருவருக்கத்தக்க உருவமும் கொண்டுள்ளாய். உனது நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்கின்றன. விலாவெலும்புகள் தெரியும் அளவு ஒல்லியானவளாக உள்ளாய். நீ யார்? மத்தா (பேய்): எனது பெயர் மத்தா. நீ திஸ்ஸா. நினைவில்லையா உனக்கு? நான் உனது கணவனின் மறு மனைவி. பல தீயச் செயல்களைச் செய்ததால், இப்போது பேய் உலகில் பிறந்துள்ளேன். திஸ்ஸா: பேய் உலகில் பிறப்பதற்கு உடலாலும் பேச்சாலும் அல்லது மனத்தாலும் அப்படி என்ன தீயச் செயல்களை செய்தாய்? மத்தா: சுலபமாக கோபம் கொண்டேன், கடுமையாக பேசினேன். பேராசையும், பொறாமையும், கபடமும் கொண்டேன். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் பேய் உலகில் மறு பிறப்பெடுத்தேன். திஸ்ஸா: ஓ ஆமாம், எனக்கு நினைவு இருக்கிறது. அந்நாளில் மிகவும் சண்டகோபியாய் இருந்தாய். மற்றொரு கேள்வி கேட்க விரும்புகிறேன