அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

சமீபத்தில் ஒர் பௌத்த பெரியவர் தந்த அறிவுரை: 'புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டுமானால் மெய்ம்மையோடு (எதார்த்தத்தோடு) ஒத்து வாழ்' (Best way to honour the Buddha is to live in line with reality).

புத்தர்  நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி கூறியது:

1. வயதாவது மனித இயல்பு. நான் வயதாவதைக் கடந்து போகவில்லை. I am of the nature to age, I have not gone beyond aging. இளமையின் மீதான மோகத்தை குறைக்க. (மோகத்தின் காரணமாக உடலாலும் பேச்சாலும் அறிவாலும் குற்றம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்)

2. நோய்வாய்ப்படுவது மனித இயல்பு. நான் நோய்வாய்ப்படுவதைக் கடந்து போகவில்லை. I am of the nature to sicken, I have not gone beyond sickness. உடல் ஆரோக்கியத்தின் மீதான மோகத்தை குறைக்க.

3. மரணமடைவது மனித இயல்பு. நான் மரணமடைவதைக் கடந்து போக வில்லை. வாழ்க்கையின் மீதான மோகத்தை குறைக்க.

4. எனக்குப் பிடித்த சுகம் தரும் பொருட்களும், அன்பும் பாசமும் கொண்ட உறவுகளும் ஒரு நாள் அப்படி அல்லாமல் மாறிப் போய்விடும். என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள். All that is mine, beloved and pleasing, will become otherwise, will become separated from me. பிறர் மீதான/ பொருட்களின் மீதான மோகத்தை குறைக்க.

5. என் செய்கைக்கு நானே உரிமையாளன்.
என் செய்கைக்கு நானே வாரிசு
என் செய்கையினால் நான் பிறந்தவன்
என் செய்கைக்கு நான் சொந்தக்காரன்.
என் செய்கையின் ஆதரவோடு நான் நிலைத்து நிற்கிறேன்.
நல்லதோ கெட்டதோ என் செய்கைக்கு நான் வாரிசாகிறேன்.
I am the owner of my kamma, heir to my kamma, born of my kamma, related to my kamma, abide supported by my kamma.
Whatever kamma I shall do, for good or for ill -
Of that I will be the heir.

செய்கை -  கன்மம்
"உடலாலும், பேச்சாலும், அறிவோடும் நோக்கத்தோடு செய்வதுதான் கன்மம்."

மற்றோர் பௌத்த பெரியவர் இவைகளை நாம் அடிக்கடி (தினசரி நான்கு ஐந்து தடவை) நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் என்கிரார். இவ்வாரு பயில்வது ஒரு shock absorber போல என்கிரார். முன்கூட்டியே பயின்றால் மாற்றம் வரும்போது நமக்கு பயமோ, நடுக்கமோ ஏற்படாது.

ஆதாரம்; அங்குத்தர நிகாயம் 5.57    
https://suttacentral.net/an5.57/en/bodhi

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்