Posts

நாகுலரின் தந்தை

Nakulapitu Sutta சங்யுத்த நிகாயம் SN22.1 இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் முதலை மலை பக்கர்களின் நாட்டில், பெசகலா வனத்தில் உள்ள மான் பூங்காவில் தங்கியிருந்தார். அப்போது இல்லறத்தார் நாகுலரின் தந்தை புத்தரிடம் சென்று, வணங்கி, ஒரு புறம் அமர்ந்து, அவரிடம் கேட்டது: "ஐயா, நான் வயோதிகன், மூத்தோன். வயதில் முதிர்ச்சி அடைந்துள்ள நான், வாழ்க்கையின் கடைசி கட்டத்திளுள்ளேன். எனது உடல் நலம் தொடர்ந்து குறைபாடுடனே இருக்கிறது. பிக்குகளை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. பகவர் எனக்கு அறிவுரையூட்டி, கற்பிப்பாராக. அது என்னுடைய நீண்ட நாள் நன்மைக்கும், மகிழ்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்." "உண்மைதான் இல்லரத்தாரே, நீங்கள் சொல்வது உண்மைதான். வருத்தங்கள் நிரம்பிய இந்த உடல், அதன் உருவத்தில் சிக்கிக்கொண்டு, துன்பம் அனுபவிக்கிறது. இந்த உடலை இழுத்துக் கொண்டு செல்பவர் எவரும், ஒரு நிமிடம் கூட அது ஆரோக்கியமாக இருப்பதாக கூறினால், அதை மடமை என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது? எனவே இவ்வாறு பயிற்சி செய்யுங்கள், 'என் உடல் துன்பத்துக்காலானாலும், என் மனம் ஆரோக்கியமாக இருக்கும்'. அவ்வாறு நீங...

மஹா கபி (குரங்கு) ஜாதகம்

 ஒரு விவசாயி தன் வயலில் மண்வெட்டியோடு  வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது எருதுகள் வயல் ஓரத்தில் இருந்த புல்லை தின்றுக் கொண்டிருக்கையில், அப்படியே பக்கத்தில் உள்ள வனத்திற்குள் சென்று காணாமல் போய்விடுகின்றன. துயரம் தாங்காமல், ஏழு நாட்களுக்கு சாப்பிட கூட நினைக்காத விவசாயி, அந்த  எருதுகளை தேடித் தேடி அலைந்தும் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரும் இமயமலை பகுதியில் எங்கே இருக்கின்றோம் என்று தெரியாமல் தொலைந்து விடுகின்றார்.  பின் பசியின் காரணமாக அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறி அதன் பழங்களை தின்னச் சென்றவர், மரக்கிளை உடைந்து ஆழ் நரகத்தைப் போல இருந்த ஒரு  பாதாள குழியின் அடியில் இருந்த குளத்தில் விழுந்து விடுகின்றார். பத்து நாட்களுக்கு அந்த குழியில் தவித்துக் கொண்டிருந்த அவரை ஒரு மாபெரும் குரங்கு, கருணையின் காரணமாக, தன் முதுகில் சுமந்து மிகவும் சிரமத்தோடு அந்த குழிக்கு வெளியே எடுத்து வருகிறது. சோர்ந்து, இளைந்து போயிருந்த அந்த குரங்கு  உறங்கி விடுகிறது. பசி மயக்கத்தில் இருந்த அந்த விவசாயி அந்த குரங்கை உணவாக கருதுகிறார். அதன் மண்டையில் ஒரு பெரும் கல்லை எடு...

நற் முயற்சி கொண்டு நன்மையில் வளர்வோம்

Image
  பெங்களூரு மகாபோதி சொசைட்டி புத்ததத்தா பாந்தே தம்ம உரையிலிருந்து தொகுத்தது. "மும்மணிகளை வணங்குகிறேன். நமது ஆசிரியர் (மறைந்த) படாபாந்தேஜி அவர்களின் திருவடிகளை வணங்குகிறேன். நமது குரு, தலைமை பாந்தே கஷ்ஷப்ப பாந்தேஜி  அவர்களை வணங்குகிறேன். ஆனந்த பாந்தே, போற்றுதற்குரிய சங்கத்தினர் மற்றும் உபாசகர்  உபாசிகர்களுக்கு வணக்கம். புது வருடம் அனைவருக்கும் அமைதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கட்டும். இப்போது தியானம் செய்தீர்கள். அதனால் மனம் அமைதி பெற்றிருக்கும்.  அதன் முன்னால் (திரிபிடகத்திலிருந்து) ஓதினோம். அதன் காரணமாக மனதில் நம்பிக்கை (சத்தா)  பிறந்திருக்கும். மனம் வலுவுற்றிருக்கும்.  இப்போது தர்ம உரை கேட்க இருக்கின்றீர்கள். இதன் காரணமாகவும் உங்கள் புண்ணியம் மேலும் பெருகும். இதனால் உங்கள் பாரமிதைகளும் வலுவுரும். வாரந்தோறும் நடைபெறும் இந்த தம்ம தேசனத்தினால் கேட்பவருக்கும் புண்ணியம், சொல்பவர்க்கும் புண்ணியம் சேர்கிறது. புது ஆண்டு தொடங்கும் இந்நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன? கடந்து போன  ஆண்டில் நாம் எவ்வளவு தானம் செய்தோம்?  எவ்வளவு புண்ணியம் சேர்த...

சார்ந்தோர்

Image
  தம்மசேனா பாந்தே, நாக்பூர் அவர்களின் தம்ம உரையில் வரும் சுத்தத்தின் மொழிபெயர்ப்பு Sevitabba Sutta அங்குத்தர நிகாயம் 3.26 "மூன்று வகையான மனிதரை உலகில் காணலாம். எந்த மூன்று? ஒரு வகையான மனிதருடன் சார்ந்து இருப்பதை, அவரோடுக் கூடச் செல்வதை  அல்லது அவருக்கு பணிவிடை செய்வதை  தவிர்க்க வேண்டும். இரண்டாமவருடன் சார்ந்து இருக்கலாம், கூடச் செல்லலாம், அவருக்கு பணிவிடை செய்யலாம். மூன்றாமவருடன் சார்ந்து இருக்கலாம், கூடச் செல்லலாம், ஆழ்ந்த மதிப்பும் மரியாதையுடன் பணிவிடையும் செய்யலாம்.    ஃஃஃ யாருடன் சார்ந்து இருக்கக் கூடாது? அப்படிப்பட்டவர் நம்மை விட ஒழுக்கத்திலும் (sīla), அமைதியிலும் (தியானம் samādhi), விவேகத்திலும் (paññā) குறைந்தவராக இருப்பார்.    இரக்கமும், கருணையும் காரணமாகத் தவிர , அப்படிப்பட்டவருடன் நாம் சார்ந்திருக்க கூடாது, அவரோடு கூடவும் செல்லக்கூடாது அவருக்கு பணிவிடையும் செய்யக்கூடாது.   ஃஃஃ எப்படிப்பட்டவருடன் சார்ந்து இருக்கலாம், கூடச் செல்லலாம், அவருக்கு பணிவிடை செய்யலாம்? அப்படிப்பட்டவர் நமக்கு ஒழுக்கத்திலும் அமைதியிலும், விவேகத்திலும் சமமாக இர...

இக்கரையும் அக்கரையும்

  இக்கரையும் அக்கரையும் சங்காரவ சுத்தம் அங்குத்தர நிகாயம் 10.117 சங்காரவ என்ற பிராமணர் புத்தரிடம் சென்று, நலம் விசாரித்து, ஒருபுறமாக அமர்ந்த பின் கேட்டது:  "கோதமரே,  இக்கரை என்றால் என்ன?அக்கரை என்றால் என்ன?" "பிராமணரே,  தவறான காட்சி இக்கரை, சரியான காட்சி (sammādiṭṭhi) அக்கரை. [1] தவறான கருத்து இக்கரை, நல்கருத்து (sammāsaṅkappo) அக்கரை. தவறான வாய்மை இக்கரை, சரியான வாய்மை (sammāvācā) அக்கரை. தவறான செயல் இக்கரை, நற்செயல் (sammākammanto) அக்கரை. தவறான வாழ்க்கை இக்கரை, நல்வாழ்க்கை (sammāājīvo) அக்கரை.  தவறான முயற்சி இக்கரை, நல் முயற்சி (sammāvāyāmo) அக்கரை. தவறான கடைப்பிடி இக்கரை, நற்கடைப்பிடி (sammāsati) அக்கரை.  தவறான அமைதி இக்கரை, நல்லமைதி (sammāsamādhi) அக்கரை. தவறான ஞானம் இக்கரை, நல்ஞானம் (sammāñāṇaṁ) அக்கரை. [2] தவறான விடுதலை இக்கரை, நல்விடுதலை (sammāvimutti) அக்கரை." உதாணம் (புத்தர் பாவடிவில் சில சுத்தங்களின் இறுதியில் சொன்ன வார்த்தைகள்) மனிதர்கள் சிலரே அக்கரை செல்வார்கள்.  மற்றவர் இக்கரையை சுற்றிக்கொண்டே இருப்பார்கள். தம்மம் நன்கு விளக்கப்படும்போது,...

ஹிரீ-ஒத்தாப்ப

Image
  மனசாட்சி-அக்கறையோடு இருத்தல் Hirī-Ottappa  ஹிரீ-ஒத்தாப்ப பிக்கு போதி அவர்களின் போதனையிலிருந்து தொகுக்கப்பட்டது. பௌத்த திரிபிடகத்தில் ஹிரீ-ஒத்தாப்ப என்ற இரு பண்புகள் சேர்ந்து காணப்படுகின்றன. இவை இரண்டும் நற்பண்புகள்.  வேண்டியவை. ஐந்து சீலங்களை கடைபிடிப்பதற்கு உதவும் பண்புகள் என்று புத்தர் கூறுகிறார். ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது.  ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதற்கான வினைப் பயனை நினைத்து அஞ்சுவது. "இரண்டு பிரகாசமான விஷயங்கள் உலகின் காவலாளிகளாக இருக்கின்றன. உலகை பாதுகாக்கின்றன. அவை: மனசாட்சி (Hirī, Conscience) மற்றும் அக்கறையோடு இருத்தல் (Ottappa, Prudence)." புத்தரின் வாக்கு AN2.9 "இந்த ஏழு விதமான செல்வங்கள் உள்ளன. எந்த ஏழு? நம்பிக்கை (Saddhā,  faith), ஒழுக்கம் (sīla, ethics), மனசாட்சி (hirī, conscience), அக்கறையோடு இருத்தல் (ottappa, prudence), கல்வி (suta, learning),    தானம் ( cāga, generosity),  விவேகம் (paññā, wisdom)." புத்தரின் வாக்கு AN7.6 ஹிரீ (அகம் சார்ந்தது) தீய செயலை நினைக்கும் ப...

மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள்   அங்குத்தர நிகாயம் 10.76 ஹிரீ-ஒத்தாப்ப என்பவை ஆன்மீக வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை என்று விளக்கும் சுத்தம். ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது.  ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதற்கான வினைப் பயனை நினைத்து அஞ்சுவது. ஃஃஃ 1 மூன்று விஷயங்கள் இல்லாமல் முழுமையாக விழிப்புற்ற புத்தர் உலகில் தோன்ற மாட்டார். அவரது போதனைகளும் பயிற்சி முறைகளும் இந்த உலகில் பிரகாசிக்காது. அவை யாவை?  மறுபிறப்பு, மூப்பு, சாக்காடு.   Rebirth, old age, and death. Jāti, jarā, maraṇañ. ஆனால் இவை மூன்றும் இருப்பதால் புத்தர் உலகில் தோன்றுகிறார். அவரது போதனைகளும் பயிற்சி முறைகளும் உலகில் பிரகாசிக்கின்றன. ஃஃஃ 2 இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல் மறுபிறப்பு, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:  காமம், வெகுளி (வெறுப்பு), மயக்கம் .  Greed, hate, and delusion. Rāgaṁ, dosaṁ, mohaṁ. குறிப்பு: காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்  (குறள் 360) (மு வரதராசனார்): விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்...